tag:blogger.com,1999:blog-9840216189508474482024-03-13T16:41:13.701-07:00ஞானப்பூ Gnana Poo"மரம் தன் பொன் இலைகள் உதிர்த்து
தன் கழுத்துக்கு ஓர் ஆபரணம் செய்துகொண்டிருந்தது.
இதுவரை நான் அதன் காலடி என நினைத்திருந்த நிலத்தை
அது தன் கழுத்து என்று சொன்னதும்,
கவ்வியது என்னைக் கொல்லும் ஒரு வெட்கம்!" - கவிஞர் தேவதேவன் (கவிதை:'மரத்தின் உருவம்')வேல்முருகன் ரெங்கநாதன் Velmurugan Renganathanhttp://www.blogger.com/profile/15691554761543886358noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-984021618950847448.post-61418507165747788752011-09-03T01:04:00.000-07:002011-09-03T01:07:07.656-07:00மலைகளினூடான பயணங்கள்...!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtdD9R8ZSFIB14gUUh4O_kpYIH-aDxT7sd1af3_IFwj6DA3DKRI9pnbl_UbxQ5SnyRzxvpC7NZCtiitlCkATVKKO68iqcXpD2gyXY8q9eiUC-wN6lriJ2URlw3tm3uM-sOQN8sh7ZvJ7GC/s1600/DSC07943.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtdD9R8ZSFIB14gUUh4O_kpYIH-aDxT7sd1af3_IFwj6DA3DKRI9pnbl_UbxQ5SnyRzxvpC7NZCtiitlCkATVKKO68iqcXpD2gyXY8q9eiUC-wN6lriJ2URlw3tm3uM-sOQN8sh7ZvJ7GC/s320/DSC07943.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5648041768560528258" /></a>
<br />
<br />மலைகளினூடான பயணங்கள்
<br />எல்லா குழந்தைகளையும் குதூகலப்படுத்துகின்றன
<br />பல மத்திம வயதுக்காரர்களை குழப்புகின்றன
<br />சில மத்திம வயதுக்காரர்களை ஆசுவாசமடையச் செய்கின்றன
<br />
<br />
<br />மலைகளினூடான ஒரு பயணத்தின் தொடக்கத்தில்
<br />பாக்கியவான்கள் யார்யாரென முடிவாவதில்லை
<br />அவர்களை மலைகளினூடான ஒரு பயணமோ
<br />அல்லது யாரோ ஒரு பயணியோ முடிவு செய்வதில்லை
<br />மாறாக அவர்களை மலைகள் மட்டுமே கண்டுணர்கின்றன
<br />
<br />
<br />மலைகளினூடான பயணங்களில்
<br />குழந்தைகள் கேள்வி கேட்கத் தொடங்கி விடுகிறார்கள்
<br />மலைகளுக்கு அப்பால் உள்ளவை பற்றி
<br />மலைகளில் வசிக்கும் பறவைகள், விலங்குகள் பற்றி
<br />மலைகளிலிருந்து விழும் அருவிகள் பற்றி
<br />பாம்புகள் இருக்குமா என்ற தமது அச்சங்கள் பற்றி
<br />அவர்கள் சிந்தனைகள் எளிமையானவை
<br />அதற்கு எளிய பதில்கள் மட்டுமே போதுமானவை
<br />மலைகளினூடான பயணங்களில்
<br />குழந்தைகள் யாவுமே தூங்க முற்படுவதில்லை
<br />மலைகளினூடான பயணத்திற்குப் பிறகு
<br />மலைகளை வரைவது அவர்களுக்கு இலகுவாகிறது
<br />தான் கண்ட அல்லது காணாத சூர்யோதத்தையோ, அஸ்தமனத்தையோ
<br />அவர்களால் மலைகளுடன் பொருத்திப் பார்க்க இயல்கிறது
<br />
<br />
<br />மலைகளினூடான பயணங்களில்
<br />பல மத்திம வயதுக்காரர்கள் குழப்பமடைகிறார்கள்
<br />பொன்பொருள் நோக்கிய வாழ்வில் தாம் தோல்வியடைவதைப் பற்றி
<br />தமது துர்கனவுகள் ஒவ்வொன்றாக நிறைவேறுவதைப் பற்றி
<br />நிறைவேறாத தனது காதலை அல்லது காமத்தைப் பற்றி
<br />பிள்ளைகள் தம் சுயவிருப்பங்களில் உறுதியடைவதைப் பற்றி
<br />சமூகத்தில் தாம் புறக்கணிக்கப்பட்ட தருணங்களைப் பற்றி
<br />மிச்சமிருக்கும் கடன்களை திருப்பி செலுத்துவதைப் பற்றி
<br />மலைகளினூடான பயணங்களில் பயணக்களைப்பை மீறாமல்
<br />இம்மத்திம வயதுக்காரர்கள் தூங்க முற்படுகிறார்கள்
<br />தம்மால் துவேஷிக்கப்பட்டவர்களின் கண்கள்
<br />ஒருபோதும் அவர்களை தூங்க அனுமதிப்பதேயில்லை
<br />
<br />
<br />மலைகளினூடான பயணங்களில்
<br />சில மத்திம வயதுக்காரர்கள் ஆசுவாசப்பட்டுக் கொள்கிறார்கள்
<br />வாழ்க்கைப் பயணத்தில் தான் அடைந்த வெற்றிகள் குறித்து
<br />தம் பிள்ளைச்செல்வங்கள் வாழக் கற்றுக் கொண்டது குறித்து
<br />இந்நாள்வரை தான் அணிந்து வரும் கெளரவமான ஆடைகள் குறித்து
<br />தாம் செய்த தவறுகள் தமக்கு மட்டுமே தெரிந்திருப்பது குறித்து
<br />தம்மைத் தேடி வந்தவர்களையும் அவர்களளித்த கெளரவங்கள் குறித்தும்
<br />அவர்கள் பெருமிதத்துடன் ஆசுவாசமடைந்து கொள்கிறார்கள்
<br />மலைகளினூடான பயணங்களில்
<br />இம்மத்திம வயதுக்காரர்கள் தூங்க முற்படுவதில்லை
<br />மாறாக பயணம் தரும் களைப்பு அவர்களை கண்ணயரச் செய்கின்றது
<br />
<br />
<br />மலைகளினூடான மனிதர்களின் தீராத பயணங்களில்
<br />மலைகள் யாரைப் பார்த்தும் புன்னகைப்பதில்லை
<br />யாரையும் அச்சம் கொள்ளச் செய்வதில்லை
<br />மனம் பிறழ்ந்து திரிபவர்களை ஏளனம் செய்வதில்லை
<br />தமது சாசுவதம் குறித்து இறுமாப்படைவதில்லை
<br />மாறாக மலைகள் யாவுமே மெளனமுற்றிருக்கின்றன
<br />
<br />
<br />தம்மைக் கடந்து செல்பவர்களுக்கெல்லாம்
<br />மலைகள் கற்பிக்க விரும்புவது ஒன்றை மட்டும்தான்
<br />அது ஆழ்ந்து மெளனித்திருத்தலைப் பற்றியது!
<br />மலைகளினூடான பயணங்களில் குழந்தைகள் தவிர்த்து
<br />தூங்குபவர்கள் தூங்க முற்படுபவர்கள் யாவருமே பாக்கியவான்களல்ல
<br />மலைகள் கற்பிப்பதை உணர முற்படுபவர்களே பாக்கியவான்கள்
<br />அவர்களை மலைகள் மட்டுமே கண்டுணர்கின்றன!வேல்முருகன் ரெங்கநாதன் Velmurugan Renganathanhttp://www.blogger.com/profile/15691554761543886358noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-984021618950847448.post-17582562363785152292010-11-24T03:32:00.000-08:002010-11-24T03:58:40.677-08:00அபத்த வாழ்வின் சூத்திரங்கள்!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipzKOu3_fUB9g-0eHQLQv-WMHm0DBRZ_QPsw-aAAVgGl7EIH59h7pFH-G8NKQCkmttKncS2LugzoSQpxE_hyphenhyphensxqVri3BtoWtFfF_4M2Mlr7VRVnH91s4jzOt2yHoJsxrQfZ0XnC-n62sGh/s1600/g5art1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 235px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipzKOu3_fUB9g-0eHQLQv-WMHm0DBRZ_QPsw-aAAVgGl7EIH59h7pFH-G8NKQCkmttKncS2LugzoSQpxE_hyphenhyphensxqVri3BtoWtFfF_4M2Mlr7VRVnH91s4jzOt2yHoJsxrQfZ0XnC-n62sGh/s320/g5art1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543078642977681746" /></a><br />வாழ்வில் தம்மை வெற்றி பெற்றுவிட்டதாக பாவனை புரிபவர்கள்<br /> <br />வெற்றியின் சூத்திரங்களை கற்று தேர்ந்துவிட்டதாக கருதிக் கொள்கிறார்கள்<br /><br />தாமறிந்த சூத்திரங்களை அவர்கள் பிறருக்கு கற்பிப்பதேயில்லை<br /><br />தாமாக கற்றுத் தேர்பவர்களை முன்னேற வழிவிடுவதுவுமில்லை<br /><br />மாறாக அவர்களிடத்து ஒருவித கள்ளப்புன்னகை உதிர்க்கிறார்கள்<br /><br />வெற்றியின் பீடம் நோக்கிய வழுக்குமரத்தில் பிடிகள் இறுகுகின்றன<br /><br />அதில் ஒரு குறிப்பிட்ட தொலைவு முன்னேறிச் சென்றவுடன்<br /><br />வாழ்வின் அத்துனை வெற்றிகளையும் அடைந்துவிட்டதாக அறிவிக்கிறார்கள்<br /><br />அவர்களின் புன்னகை முகங்களில் இப்பொழுது மமதையின் கெக்களிப்பு<br /><br />மேலே இருப்பது பீடங்களல்ல பீடம் மட்டுமேயென உறுதியடைந்ததும்<br /> <br />அவர்களுக்குள் விரைவாகப் பற்றிக் கொள்கிறது அதீத பதட்டமொன்று<br /> <br />அபத்த வாழ்வின் வெற்றி சூத்திரங்கள் பத்திரப்படுத்தப்படுகின்றன<br /><br />அவற்றை கீழே நிற்பவர்கள் புரிந்து கொள்ள விடப்படுவதேயில்லை<br /><br />வேர் பற்ற விழைந்து பின் நம்பிக்கையிழந்து வெளியேறுபவர்களின்<br /><br />பெருமூச்சு வெப்பக்காற்றில் இறுகுகின்றன வழுக்குமரத்தின் வேர்கள்<br /> <br />அவை வெறுப்பின் கசப்புறிஞ்சி பண வாசனையை பரவவிடுகின்றன<br /><br />அவர்கள் தமது குழந்தைகள் புரிந்துகொள்ளும் வயதெட்டும் வரை<br /> <br />விரல்கள் கடுக்க பற்றியிருக்கிறார்கள் பளபளப்பேறிய அவ்வழுக்குமரத்தை<br /><br />எதையும் ஒப்புக் கொடுப்பதென்பது அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டிருக்கிறது<br /> <br />அபத்த வாழ்வின் வெற்றி சூத்திரங்களைக் கற்றுவிட்டதாக நினைப்பவர்கள்<br /><br /> கறந்த பாலின் வெம்மைக்கான காரணத்தை உணர்ந்திருக்கவில்லை<br /><br /> பிறந்த குழந்தையின் சிரிப்பை பொருட்படுத்துவதேயில்லை<br /><br /> உழைத்துக் களைத்தவனின் முகச்சுருக்கங்களை கவனிப்பதேயில்லை<br /><br /> பனித்துளியொன்றின் அழகிய கணங்களை அனுபவிப்பதில்லை<br /><br /> காற்று இலைகளோடு பேசும் மொழியைக் கற்றிருக்கவில்லை<br /><br /> சூரியக்கதிர்களின் சொஸ்தப்படுத்தும் சக்தியைத் தெரிந்திருக்கவில்லை<br /> <br /> மலைகளின் நீண்ட கனத்த மெளனத்தைப் புரிந்திருக்கவில்லை<br /><br /> பற்றற்று விலகியவர்களின் ஒளிரும் முகங்களை தரிசிப்பதேயில்லை<br /><br /> அவர்கள் கடைசிவரை ஒத்துக் கொள்ள முயற்சிப்பதேயில்லை<br /><br /> வாழ்வின் சூத்திரங்கள் எதை நிறுவ முற்படுகின்றனவென்பதை!வேல்முருகன் ரெங்கநாதன் Velmurugan Renganathanhttp://www.blogger.com/profile/15691554761543886358noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-984021618950847448.post-88066422371310580032010-07-27T07:55:00.000-07:002010-07-27T07:58:15.412-07:00துரோகத்தின் சுடு நிழல்கள்!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJpomtWjfrOR_lKCxl8gp0w-0o4W8apaHwZRSpAxSXCGLBHsgbwq2S_QpM9qmpqbYPOTbkoNsOU-3dit6VPaRM2wonGdolpTE_9Ab3WUi5tXqFaTpXa6dRJ4N0ykyI1bcdyjMgHwLIzmIg/s1600/257711-8-sadness12.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJpomtWjfrOR_lKCxl8gp0w-0o4W8apaHwZRSpAxSXCGLBHsgbwq2S_QpM9qmpqbYPOTbkoNsOU-3dit6VPaRM2wonGdolpTE_9Ab3WUi5tXqFaTpXa6dRJ4N0ykyI1bcdyjMgHwLIzmIg/s320/257711-8-sadness12.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498600296071093874" /></a><br /><br />உனக்கும் எனக்குமிடையேயான விளையாட்டில் மேலுமொரு சீட்டுக்கட்டு கலைகிறது நம்மையுமறியாமல்!<br /><br />இல்லையெனில் இவ்வளவு குழப்பங்கள் தரும் புதிர்களும், ஆயாசங்களும் திடீரென உன்னுள் நுழைந்திருக்குமா என்ன?<br /><br />நமது பரஸ்பர புரிதல்களையும், விட்டுக் கொடுத்தல்களையும் நொடிகளில் நீ கடந்த காலமாக்கிவிட்டாய்!<br /><br />உன் அர்த்தமற்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான என் கனத்த மெளனம் உன்னை ஆத்திரப்படுத்தியிருக்கக் கூடும் தான்<br /><br />அதற்காக பின்புலங்களற்ற உன் எல்லா குற்றச்சாட்டுகளையும், அனுமானங்களையும் ஒரேடியாக ஏற்றுக் கொள்வதற்கில்லை<br /><br />சில கணங்களில் என்னுள் சேகரமாயிருந்த சுடுசொற்களை மெல்ல மென்று பின் விழுங்கிக் கொண்டேன்<br /><br />சாஸ்வதமான காலம் தரவிருக்கும் சொஸ்தப்படுத்துதல்கள் மட்டுமே இப்போதைக்கு அமைதி தருகின்றன <br /><br />எனது அகவயமான காயக்கண்களை மீண்டும் மீண்டும் தீண்டத் துழாவுகின்றன விரிந்து நீளும் உன் அமில நாக்குகள்<br /><br />சொற்களாவது பரவாயில்லை, நீ இன்றெனக்கு செய்து கொண்டிருக்கும் துரோகத்தின் துயர நிழல்களை எங்ஙனம் துடைப்பேன்?<br /><br />உன்னை ஆசுவாசப்படுத்தவோ, நமதுறவின் அருமை விளக்கவோ எனக்கு நீ எந்த கால அவகாசமும் அளிக்கவேயில்லை<br /><br />அதெல்லாம் இருக்கட்டும், நீ தொடரும் தவறுகளை எடுத்துணர்த்த உனக்கு ஒரு நண்பன் கூடவா இல்லாமல் போவான்?<br /><br />பிற்பாடு உண்மையுணர்ந்து நீ என்னை சந்திக்க எத்தனிக்கையில் இயல்பாகச் சிரித்துத் துளிர்க்கும் நமதுறவு!வேல்முருகன் ரெங்கநாதன் Velmurugan Renganathanhttp://www.blogger.com/profile/15691554761543886358noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-984021618950847448.post-21595309535457226212010-07-27T07:49:00.000-07:002010-07-27T07:54:43.651-07:00இது மற்றுமோர் காதல் கவிதையல்ல!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuvaULOFfnutGVTDi0YVvEu6Ajz2XrV6iJtZyWLqVZZEyECOm0sAB0NCrwgr6YVWlWnwT0pBwCn8aicS-Lt96BDJVloAOWMo_Vg35seAr86BJWwhwiQ-q__A5btnecN0cHv_tZ0gihGbvO/s1600/3Jokes_Love_Wallpaper_8.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuvaULOFfnutGVTDi0YVvEu6Ajz2XrV6iJtZyWLqVZZEyECOm0sAB0NCrwgr6YVWlWnwT0pBwCn8aicS-Lt96BDJVloAOWMo_Vg35seAr86BJWwhwiQ-q__A5btnecN0cHv_tZ0gihGbvO/s320/3Jokes_Love_Wallpaper_8.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498598697709351634" /></a><br /><br />நான் எதிர்பாராத்தன்மையை நேசிப்பவன் தான்; ஆனால் இம்மாதிரியான தாக்குதலையல்ல<br /><br />நீ காதலை தெரிவித்த கணம் ஒரு கனத்த அமைதிக்குப் பிறகானதாக இருந்திருக்கலாம்<br /><br />மற்றபடி காதல் தெரிவிக்கப்பட்ட விதம் மிகக் கெளரவமானதாகவே இருந்தது<br /><br />பிறகு தான் கவனித்தேன், உன் ஆடைகளிலும் சிகையலங்காரத்திலும் இன்றிருந்த மாற்றத்தை!<br /><br />எப்போதும் போலல்லாமல் இன்று நீ எனக்கென எந்த கால அவகாசமும் தரவில்லை <br /><br />'இந்த மூக்குக் கண்ணாடி உனக்கு பொருத்தமானதாக இல்லை’ என்கிறாய் சிறிதும் சலனமின்றி<br /><br />தெரிவித்தலை தொடர்ந்த உனது சுவாரஸ்யப் பேச்சில் திக்கற்று திகைக்கின்றேன் நான்<br /><br />வளர்பிறை தோன்றும் இம்மாலைப்பொழுது நீ தேர்ந்தெடுத்ததா?, இல்லை இயல்பாக அமைந்துவிட்ட ஒன்றா?<br /><br />நமது நட்பு குறித்து பிற்பாடு எழப்போகும் கேலிகளைப் பற்றி இப்போது வருந்துவதற்கில்லை<br /><br />வாடிக்கையான நண்பனின் வருகை இன்று மட்டும் ஏனோ குற்றவுணர்வை தோற்றுவிக்கிறது<br /><br />பிறர் அறிந்துவிடாமலிருக்க நான் மேற்கொள்ளும் கவனங்களில் என் உடல் மொழி இயல்பிழக்கிறது<br /><br />நேரம் தேய்ந்து கொண்டிருக்கிறது; முதலில் இந்த மூக்குக் கண்ணாடியை மாற்ற வேண்டும்!<br /><br />மறுக்கப்பட்ட காதலென்று எதுவும் உண்டா என்ன? அதுவும் ஒரு பெண் சொல்லி!<br /><br />நாளை நாம் சந்திக்கப்போகும் அக்கணங்கள் மீண்டும் மீண்டும் என் நினைவிலாடுகின்றன<br /><br />இப்போதைய எனது கவலையெல்லாம் முடிவின்றி நீளப் போகும் இவ்விரவைப் பற்றியதுதான்!வேல்முருகன் ரெங்கநாதன் Velmurugan Renganathanhttp://www.blogger.com/profile/15691554761543886358noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-984021618950847448.post-74213025407262306032009-11-06T22:21:00.000-08:002009-11-06T22:29:32.207-08:00எனது கோப்பைகள் சிரிக்கின்றன!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLasA1G-omLTni24VXyJqlFyldFx5-_8HcuGtxnqr7orU_0f2cCMhKBZZ31IuDEC42aY5iBmA_5-axFMoxI_UKF6oNLODwz4aXljQVkj-bo6PcGCP8ln9RW8_P9Jc8GGmaPXMXvcPKUjw5/s1600-h/broken20glass.gif"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 313px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLasA1G-omLTni24VXyJqlFyldFx5-_8HcuGtxnqr7orU_0f2cCMhKBZZ31IuDEC42aY5iBmA_5-axFMoxI_UKF6oNLODwz4aXljQVkj-bo6PcGCP8ln9RW8_P9Jc8GGmaPXMXvcPKUjw5/s320/broken20glass.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5401243963035136066" /></a><br />விருப்பமேயில்லை என்று அறிந்தேதான் அழைத்திருந்தேன் அவனை<br /><br />வந்த கட்டாயத்திற்காவது விழைந்திருக்கலாம்; புன்னகைத்திருக்கலாம்<br /><br />செத்த சொற்களை உதிர்த்து தன் கட்டாய இருத்தலை காட்டாமலிருந்திருக்கலாம்<br /> <br />கோப்பையைப் பிடித்த லாவகத்தை சற்றே மாற்றியமைத்திருந்திருக்கலாம்<br /><br />எப்பொழுதும் போலல்லாமல் இடக்கையைப் பயன்படுத்தியிருக்க வேண்டியதில்லை<br /><br />இருக்கையில் சற்றே தளர்ந்த தொனியிலாவது அமர்ந்திருந்திருக்கலாம் <br /><br />பல சமயங்களில் சூழலின் இறுக்கமே சொல்லிவிடுகின்றன எல்லாவற்றையும்<br /><br />விருப்பமின்றி அருந்துவதென்பது தெரிந்தே நஞ்சினை உட்கொள்வது போலாகும்<br /><br />கோப்பை வேறு என்னைப் பார்த்து கெக்களிக்க ஆரம்பித்துவிட்டிருந்தது <br /><br />அவனுக்கு தன்னை சூழலுக்கேற்றவாறு மாற்றிக் கொள்ள தெரியவில்லை -<br /><br />திரவமானது தான் ஊற்றப்படும் கோப்பையின் வடிவத்திற்கு மாறிக் கொள்வதைப்போல!<br /><br />கலைக்கப்படாத மெளனத்தின் சாட்சியாய் தளும்பிக் கொண்டேயிருந்தது கோப்பை -<br /><br />என் விருப்பத்திற்கும் வெறுப்பிற்கும் இடையில் நிரம்புவதும், தீர்வதுமாய்!<br /><br />நேரம் மெளனத்தின் சஞ்சலத்தை எப்பொழுதும் இருமடங்காக்கவே செய்கிறது<br /><br />பற்றவைத்த சிகரெட் புகை வேறு மெளனத்திரையில் கறையேற்றிக் கொண்டிருந்தது<br /><br />மகிழ்ச்சியாயிறங்காத ஒவ்வொரு மிடரும் துக்கத்துடனேயே தொண்டை கடந்தன<br /><br />அவ்விடுதி அழகிகளின் நடன நளினங்களுக்காகவாவது மசிந்து தொலைத்திருக்கலாம்<br /><br />அவன் இருத்தல் குறித்த என் அக்கறையை மேலும் உதாசீனப்படுத்திக் கொண்டேயிருந்தான்<br /><br />துரோகங்களாவது மன்னிக்கத்தக்கவை; புறக்கணிப்புகளின் வலிகளை என்ன செய்ய?<br /><br />மறுநாள் விடுமுறை வேறு! இளஞ்சூட்டு காஃபியுடன் கனக்கும் தலையை இலேசாக்கிக் கொள்ளலாம்<br /><br />நான் பருகிய அப்புறக்கணிப்பு வேதனைகளின் பிம்பங்களை எங்ஙனம் அழிக்க?<br /><br />என் வெறித்த பார்வைக்கு வலுவிழந்து காலியாக ஆரம்பித்தது கோப்பை<br /><br />அவனுடைய கோப்பை நிரம்பாதது குறித்த கவலை என்னைவிட்டு அறவே போய்விட்டிருந்தது<br /><br />ஓரிரு வன்ம வார்த்தைகளால் கனத்த அம்மெளனத்திரை கிழிக்கப்பட்டிருக்கலாம் -<br /><br />சற்றே கவனக்குறைவால் கை நழுவி உடையும் ஒரு கண்ணாடிப் பேழையைப் போல!<br /><br />முடியும்தான் என்றாலும் மேலும் இறுக்க விரும்பவில்லை நெருடும் அம்முடிச்சுகளை<br /><br />என் சாத்தானின் ‘தற்காலிக வெள்ளை மனசுக்கு’ நான் நன்றி சொல்லிக் கொண்டேன்<br /><br />அவ்விறுக்க சூழ்நிலையை இளகச்செய்ய கடைசியில் தானே உடைந்து சிதறியது என் கோப்பை!வேல்முருகன் ரெங்கநாதன் Velmurugan Renganathanhttp://www.blogger.com/profile/15691554761543886358noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-984021618950847448.post-58210485812462631192008-11-07T21:20:00.000-08:002008-11-07T21:28:13.840-08:00கடவுள் இருக்கிறார்…!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7GH-1m-X20OL8SKfNC6RBEol73i-FL7qOhvmXKJHzSrH4DcPXF6oE22292UQc7n_k5GS_gD-SA_l13rstMedYY85Gm_40P6F2dpuWANiDLUFMNtbaAxWIb_MP7FhZSu3BUMvj618-jmvJ/s1600-h/Don_Barranco_The_Agnostic_Survivor_Watercolor_56_x_39_cms_2002.30254314.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 238px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7GH-1m-X20OL8SKfNC6RBEol73i-FL7qOhvmXKJHzSrH4DcPXF6oE22292UQc7n_k5GS_gD-SA_l13rstMedYY85Gm_40P6F2dpuWANiDLUFMNtbaAxWIb_MP7FhZSu3BUMvj618-jmvJ/s320/Don_Barranco_The_Agnostic_Survivor_Watercolor_56_x_39_cms_2002.30254314.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5266153010979638306" /></a><br />“நாலரை - ஆறு நடை சாத்திடுவாங்க” - ரெண்டு ரூவா சீட்டு, அர்ச்சனைத்தட்டுடன் சில அவசர நடைகள்<br /><br />“ஸ்பெஷல் தரிசனம் பதினஞ்சாம்!” - சலித்தபடி சவுக்குத் தடுப்பில் மஞ்சள் பை மாட்டினான் மொட்டைத்தலை<br /><br />மீசை துடைத்து மணிக்கட்டு பார்த்த கருத்தஉதட்டு கட்சி கரைவேஷ்டிக்கு யார் சிபாரிசிலோ ‘க்ளோஸ் – அப்’ காட்சி<br /><br />மூட்டுவலி தன் மூப்பின் சொத்தாகிப் போன ‘பாம்பட’ கிழவிக்கு முப்பது நிமிட புண்ணிய தரிசன காத்திருப்பு<br /><br />சீட்டு சரிபார்த்தும் – பார்க்காமலும், மந்திரம் சொல்லியும் - சொல்லாமலும் நாழிக்கொரு தீப ஆராதனை<br /><br />அரைத் தேங்காயானாலும் கொடுத்த தட்டே திரும்ப வந்ததில் பெருத்த சந்தோஷம் ‘பட்டுப்புடவை’ பெரியம்மாவுக்கு <br /><br />பிரதோஷ பலன் வேண்டி, நந்தியின் ஒரு காது மறைத்து மறு காதில் குறை கொட்டினாள் ‘பிளாஸ்டிக் வளையல்’ புள்ளத்தாச்சி<br /><br />“... திவ்யதரிசனம் கண்டு பலன் பெருவீர்!” - திருவிழாவையொட்டி கூட்டத்திடம் கூவி சொன்னது போஸ்டர் தட்டி<br /><br />பிரகார வெளிச்சுவரின் தென்மேற்கு மூலையில் காரை பெயர்த்து கம்பீரம் கொண்டிருந்தது ஆறு அங்குல ஆலஞ்செடி<br /><br />“…செவுத்துல நெறைய தப்புமொளைங்க, வேர்ல ஆசிட் ஊத்த சொன்னதா நம்ம ஆறுமுகங்கிட்ட மறக்காம சொல்லிடு…” -<br /><br />தப்பு முளை தன் கண்ணில் பட்ட கணம், செல்ஃபோனில் அதிகார அதட்டல் விடுத்தார் ஊர்த்தலையாரி<br /><br />சரபேஸ்வரர் சந்நிதி சுவரில் ‘அவசரக்கடன்’ கழித்த காகமொன்று படபடத்து பறந்தது வடகிழக்கு நோக்கி<br /><br />‘சுர்’ரென்று சுட்ட வெயில் சுணக்கம் காட்ட, கருமேகக் கண்டனங்காட்டி கடுகடுத்து கரைந்தது சனிமூலை<br /> <br />ரெண்டு நாள் கழித்து ஆறஅமர ஆறுமுகம் ஆசிட் ஊற்றுகையில், நனைந்து நைந்திருந்தன போஸ்டர் தட்டிகள்!வேல்முருகன் ரெங்கநாதன் Velmurugan Renganathanhttp://www.blogger.com/profile/15691554761543886358noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-984021618950847448.post-69707108843554509662008-08-07T02:00:00.000-07:002008-08-08T21:40:54.421-07:00பிரபஞ்சம் - ஒரு புதிர்!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQxBoepzie_GFdGtc7aG9vN1B5ZDBxpGyzZFaIELX6nCFiKxTKadTVhFQQA0IXK_rE80KPV0Tik1Uceq__yV8kIseXM3Qwghgz9mAWNP6d_yOVPzylkkxJKlqAGtkIcKLkpygl2p4ko1km/s1600-h/m81-galaxy.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQxBoepzie_GFdGtc7aG9vN1B5ZDBxpGyzZFaIELX6nCFiKxTKadTVhFQQA0IXK_rE80KPV0Tik1Uceq__yV8kIseXM3Qwghgz9mAWNP6d_yOVPzylkkxJKlqAGtkIcKLkpygl2p4ko1km/s320/m81-galaxy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5231698708338174082" /></a><br />பிரபஞ்சம் மட்டுமே புதிரா? பிற பஞ்சங்கள் புதிரல்லவா?<br />தீர்வுகள் காண வழியுண்டு பஞ்சப் புதிர்களுக்கு, விழைவில்லை நமக்கதற்கு<br />ஒரு புள்ளியில் செறிந்து நொடிகளில் பல்கிப் பெருகியதாம் பிரபஞ்சம்<br />காட்சி பிம்பம் பலதந்தும் அண்டம், பேரண்டம் ஒரே சமயம் விரிக்காதோ நம் விழிகள்?<br />எரிமீன்கள் பல எறிந்து பால் வீதி வழிகடந்து –<br />பூமித்தாய் தூண்டில் சேர்வானவன், எரிபாலகனாம்!<br />மேற்கில் புதைத்து கிழக்கில் கிளப்பும் வாடிக்கை உட்பட அனைத்துமே வித்தைகள்தான்<br />வித்தைகள் பயிலும் வித்தகர்கள் உணர்ந்திட்டனரோ சாத்திரத்தின் சூட்சுமமதை?<br />ஆரமிட்டு ஆராய்ந்து சூட்சுமத்தின் சாளரங்கள் திறந்திடுமா நம் கலன்கள்<br />சுயம்பாய் திரியும் கேள்விகளைப் போல் இயற்கை நடத்தும் வேள்விகளும் விரிகிறது<br />ஆம், பிரபஞ்சம் ஒரு புதிர்தான்...<br />அது நாம் நெருங்க இயலா ஒரு வெப்பப் புதிர்!வேல்முருகன் ரெங்கநாதன் Velmurugan Renganathanhttp://www.blogger.com/profile/15691554761543886358noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-984021618950847448.post-5296155895200505032008-07-15T07:30:00.000-07:002008-12-11T15:33:45.301-08:00கலையாத மெளனம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKzOW2wRyUST9rpZgF-20nf-TeHctZNfxptwxsrovb0JF3nhad_od9YERzeVmh8gOfcloC1fhFf4d31N5XRcvMHyd0p_rcm42-svTo9vB5QaTzxIDA_UD42o0RONgbie2ZcCbs1TgojOvD/s1600-h/luv.bmp"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKzOW2wRyUST9rpZgF-20nf-TeHctZNfxptwxsrovb0JF3nhad_od9YERzeVmh8gOfcloC1fhFf4d31N5XRcvMHyd0p_rcm42-svTo9vB5QaTzxIDA_UD42o0RONgbie2ZcCbs1TgojOvD/s320/luv.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5223248954633884770" /></a><br />முன் பனிக்காலத்தின்<br />வைகறைப்பொழுதொன்றில்<br />என் பெயரை மெல்ல உச்சரித்துப்பார்<br />உனக்கும், எனக்குமான<br />மெளனம் விலகட்டும்!வேல்முருகன் ரெங்கநாதன் Velmurugan Renganathanhttp://www.blogger.com/profile/15691554761543886358noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-984021618950847448.post-53713418989280878252008-07-15T07:29:00.001-07:002008-12-11T15:33:45.824-08:00மரங்களின் கண்கள்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ35e7oMsgJjQXgLY9O-PXXEkYAk7HNcKCPXQxKBsmc1CXwpz2Kg9gprd_RZb-DGi8So6tVScfDKD78Elowprd253x6FNJT5E4jn_PHPN4MGqx7GOJJ77R8udKjQjS_VpRV5_jmaJjzvpg/s1600-h/iii_illo_2.png"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ35e7oMsgJjQXgLY9O-PXXEkYAk7HNcKCPXQxKBsmc1CXwpz2Kg9gprd_RZb-DGi8So6tVScfDKD78Elowprd253x6FNJT5E4jn_PHPN4MGqx7GOJJ77R8udKjQjS_VpRV5_jmaJjzvpg/s320/iii_illo_2.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5223247992727664002" /></a><br />ஒவ்வொரு இலை உதிரும்போதும்<br />திறந்து மூடுகின்றன மரங்களின் கண்கள்<br />ஆயிரமாயிரம் திறந்து மூடல்கள் - <br />ஒவ்வோர் இலையுதிர்காலத்திற்கும்<br />எனினும், இலையுதிர்காலங்கள் தொடர்வதில்லை<br />வசந்தம் நோக்கிய<br />காத்திருப்புகளில் மகிழ்கின்றன மரங்கள்<br />மரங்களுக்கான சில நியதிகள்<br />மானுடத்திற்கும் பொருந்தவே செய்கின்றன!வேல்முருகன் ரெங்கநாதன் Velmurugan Renganathanhttp://www.blogger.com/profile/15691554761543886358noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-984021618950847448.post-60351331026222842012008-07-14T20:35:00.000-07:002008-12-11T15:33:45.940-08:00வெளிப்படாத புராதனங்கள்...<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHWYJYz4ZRPou8dl47fvHH9_fAYw7PUhw4UoYTCgxF5MkEAKqwnTssfX4pJK_K_86xBf0B36ZknmLgqAlZZAxR6iw9qaXk0j9InWIwiYbo-raMb_Y5rXywgnxPpmmt_GzQdQbZ37MkBzDx/s1600-h/civilization.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHWYJYz4ZRPou8dl47fvHH9_fAYw7PUhw4UoYTCgxF5MkEAKqwnTssfX4pJK_K_86xBf0B36ZknmLgqAlZZAxR6iw9qaXk0j9InWIwiYbo-raMb_Y5rXywgnxPpmmt_GzQdQbZ37MkBzDx/s320/civilization.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5223209714123580738" /></a><br />புரிந்து கொள்ளும் நிலையிலில்லை யாரும்<br />அறிய வைக்கவும் அவசியமில்லை<br /><br />படிந்து கொண்டிருக்கின்றன நினைவுகள் -<br />நமக்கல்லாத நாளையில் புதைய<br /><br />மீண்டும் சில நினைவுகள் மலரலாம் - <br />நாளை மறு நாள் புதைவதற்கு<br /><br />புதைபவை எல்லாம் அழிபவையல்ல -<br />அவை புராதனச் சின்னங்கள்<br /><br />புரிதல்கள் அறிந்த உலகில்<br />அப்புராதனங்கள் ஒரு நாள் வெளிப்படும்<br /><br />அவை நாமல்லாத உலகாயிருக்கலாம்<br /><br />காலம் மட்டுமே சாஸ்வதம்<br /><br />வெளிப்படாத புராதனங்கள்<br />காலத்தின் கதவுகள் நோக்கியே காத்திருக்கின்றன!வேல்முருகன் ரெங்கநாதன் Velmurugan Renganathanhttp://www.blogger.com/profile/15691554761543886358noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-984021618950847448.post-5762574666606540642008-07-14T20:33:00.001-07:002008-12-11T15:33:46.215-08:00‘ஜீரோ வாட்ஸ்’ சந்தோஷம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmnpIoFz0q0eKKM1nye627sHyrUs2jyeNMCl5NVQ936PGxNnkN8jjHm_04L07Jz2rSnW1Nug3SxvclDDxVnMc8OtQscDOfShmUo_4OgZj2AHKkNHaVn2-Bfv_CQcDuYffKwZAbLQsmSGaP/s1600-h/vayal.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmnpIoFz0q0eKKM1nye627sHyrUs2jyeNMCl5NVQ936PGxNnkN8jjHm_04L07Jz2rSnW1Nug3SxvclDDxVnMc8OtQscDOfShmUo_4OgZj2AHKkNHaVn2-Bfv_CQcDuYffKwZAbLQsmSGaP/s320/vayal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5223079147464444178" /></a><br />நினைவுகளின் நீட்சிக்கான கால அவகாசத்தில் விரிகிறது, <br />மின்துண்டிப்பு செய்யப்பட்ட பின் மாலைப்பொழுதொன்று<br />நார்த்தங்குருவிகள் அமைதி காக்கின்றன<br />ஆந்தைகள் தலைதிருப்பி முறைக்கின்றன<br />தவிட்டுக்குருவிகள் திகைத்தோடுகின்றன<br />வைக்கோல்போர் பாம்புகள் உடல்சுருட்டி நெளிகின்றன<br />முன்னங்கால்கள் மடக்கி படுக்கின்றன சில மாடுகள்<br />‘இப்போதைக்கு வராதாம்!' - யாரோ உரத்து சொல்கிறார்கள்<br />அடுக்களை பாட்டிகள் உச்சுக்கொட்டுகிறார்கள்<br />தாத்தாக்கள் பேச்சைக் குறைக்கிறார்கள்<br />அப்பாக்கள் சிரிப்பது போல் தெரிகிறார்கள்<br />செட்டியார் சைக்கிள் பெடல் கிறீச்சிடுகிறது<br />மாட்டுக்கொட்டகை பக்கத்திலிருந்து சன்னமானதொரு சீட்டியொலி<br />புத்தகங்கள் விசிறியெறியப்பட்டு விளையாட்டு களைகட்டுகிறது<br />என்றும் போலல்லாமல் மேட்டுத்தெரு ஊமையனும் கலந்து கொள்கிறான்<br />அம்மாக்கள் பிசையும் சோற்றில் நிலவொளியும் கலக்கிறது<br />சிதறிய மேகபஞ்சுகள் நிலவின் கறைதுடைக்க முற்படுகின்றன<br />பெயர் தெரியாத பறவைகள் வடக்கு நோக்கி செல்கின்றன<br />செவ்வரளி மர இலைகள் புதுப்பொலிவுபெறுகின்றன<br />காசித்தும்பைச் செடிகள் விரைந்து வேர்விடுகின்றன<br />கத்தரி பூக்கள் தம்மை மேலும் நிறமேற்றிக் கொள்கின்றன<br />வண்டுகளின் ரீங்காரத்துடன் சூலகமடைகின்றன மகரந்தத்தூள்கள்<br />பவழமல்லி வாசம் முற்றத்தில் பரவுகிறது<br />இதோ..... மின்னிணைப்பு திரும்ப கிடைக்கிறது…..<br />அம்மாக்கள் கடுமையாகிறார்கள் <br />குழந்தைகள் கண்செருக புத்தகம் பிரிக்கிறார்கள்<br />ஊமையன் எரிச்சலுடனே திரும்புகிறான்<br />செயற்கை வெளிச்சத்தில் இயற்கை தன்னை தோற்றதாகவே காட்டிக்கொள்கிறது<br />மெல்ல நகரும் மேகங்களால் மறையும் நிலவு அதையே பறைசாற்றுகிறது<br />மிதப்பதும் பின் அமிழ்வதுவமாகவே இருந்திருக்கிறது சந்தோஷம்<br />திடீர் ஹாரன் சத்தத்தில் சுழியாகிறது நினைவுகளுக்கான கால அவகாசம்<br />எதிர்ப்படும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் கூசுகின்றன கண்கள்!வேல்முருகன் ரெங்கநாதன் Velmurugan Renganathanhttp://www.blogger.com/profile/15691554761543886358noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-984021618950847448.post-91265184280770291122008-07-14T05:09:00.000-07:002008-12-11T15:33:46.366-08:00இப்போதைக்கு விட்ட மழை!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvDhhl8q9PfTlescNVzT5_S9qIb6wddeXCdeSMxEnlth1xJr3M0so7rXVWnjvdJ_T0KgiXTsBfU4dI2S2C0zwW8i8dRUl0Qyd5bUk4QfXP-x8gVPnJUGiWUUz7wPikcFA-zmKmrehTFrNp/s1600-h/mazhai.bmp"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvDhhl8q9PfTlescNVzT5_S9qIb6wddeXCdeSMxEnlth1xJr3M0so7rXVWnjvdJ_T0KgiXTsBfU4dI2S2C0zwW8i8dRUl0Qyd5bUk4QfXP-x8gVPnJUGiWUUz7wPikcFA-zmKmrehTFrNp/s320/mazhai.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5222841795524403090" /></a><br />இப்போதைக்கு விடாத மழையில் அவ்வளவாக அழகில்லைதான்<br />குடையிருந்தும் குதிகால் நடையில் கடுப்புடன் கடையொதுங்குகிறான் புதுசெருப்புக்காரன்<br />மூக்கணாங்கயிறும், பாஸ்கர் சிலேட்டும் ஊர் கண்ணிலிருந்து ஓய்வுபெற்று உள்செல்கின்றன <br />வயிறு பிளந்த பின் கயிறு கட்டிக் கொண்ட ரேடியோவுக்கு தொண்டை கனக்கிறது<br />நரை மறைத்த நடுத்தர வயது வேஷ்டிக்கோ வயக்காட்டு வயித்தெரிச்சல்<br />எதிர் வீட்டு பொடிசுகளின் குதூகூல கத்திக்கப்பல்கள் குறைதூரத்தில் தலை சாய்கின்றன<br />உமி மூட்டை கதகதப்பில் நிலை மறந்த ‘செகப்பு சுடி - நீல சட்டை’ ஜோடி தவிர்த்து,<br />தற்காலிக கூரையடி காத்திருப்புகளில் அனைவருக்குமே அமைதியில்லை!<br />அஞ்சு மணி அவசர இருட்டுக்கு படபடத்து கண்விழிக்கிறது உபய உபத்திரவம் ஏதுமில்லா பச்சை டியூப் லைட்<br />சதா ‘எட்டுக்கு மூணு’ நடைபழகும் மளிகைக்கடை அரைடிரவுசருக்கு அரிதான ஸ்டூல் ஓய்வு<br />இடியொன்று தன் பலத்த அதிருப்தி காட்ட, ஆங்காரம் குறைந்து வெலவெலத்தது மழை<br />நனைந்து ஒதுங்கிய முக்குத் தெரு முதலியார் வீட்டு நாய் உடல் சிலிர்த்து வாலாட்டுகிறது<br />தலை சிறுத்து உடல் பருத்த தவளைகளிரண்டு தத்தித் தாவி தண்ணீர் கலக்கின்றன<br />‘…மெரண்டு போயி நிக்குங்களோ என்னவோ?’ - முனகியபடி கோணி போர்த்தி விரைகிறாள் பால் சொம்புக்கு சொந்தக்காரி<br />புண்ணாக்கு ருசித்த பெரிசொன்று ஸ்டார்ட்டர் போட்டு டி.வி.எஸ் 50 மிதிக்கிறது<br />‘உங்களுக்கு வேற ஏதாவது வேணுமா சார்?’ - கடைக்காரன் கேட்க கலைகிறது என் கவனம்<br />‘வேறென்ன? மீண்டும் ஒரு மழைதான்!’ - சொல்லாமல் வானம் பார்த்து கைகட்டி வெளியேறுகிறேன்<br />இப்போதைக்கு அடுத்த மழை வரப்போவதில்லை என்பதை நம்பாமல்!வேல்முருகன் ரெங்கநாதன் Velmurugan Renganathanhttp://www.blogger.com/profile/15691554761543886358noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-984021618950847448.post-46085372375192133872008-07-14T04:55:00.000-07:002008-08-07T02:13:31.677-07:00காதல் கி. பி 200x<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_yUQrkpGHYkh4ND2tSMHfdFVAtdhj_XRwtUEvJoLVGhbZRBDgw_v70gMPffQ8xHcGW_jeLcn3NC88F0Vf9cPcYNXaNKqPvMFizVAhauuis5WHl0MFEODug8uuDo8UxMg86eEd_O6FRZVm/s1600-h/Cupid.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_yUQrkpGHYkh4ND2tSMHfdFVAtdhj_XRwtUEvJoLVGhbZRBDgw_v70gMPffQ8xHcGW_jeLcn3NC88F0Vf9cPcYNXaNKqPvMFizVAhauuis5WHl0MFEODug8uuDo8UxMg86eEd_O6FRZVm/s320/Cupid.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5231701202537433970" /></a><br />பயபுள்ள காட்னான் சிக்னலு<br />சிறுக்கிக்கு இர்ந்தது ‘சில்’லுன்னு<br />பைசா பார்ட்டி டாட்டரு <br />நைசா தட்டுனான் லெட்டரு<br />வெர்பல் ப்ரபோஸ்ஸூ ஈவ்னிங்கு<br />சத்தாய்ப்பு தெனமும் மார்னிங்கு<br />செருப்பால அடிப்பன்னு திட்டினா<br />அப்பால ப்ரைட்டாச்சு ‘ரெட்டினா’<br />வயசோ ரெண்டுக்கும் விடலை<br />ஓயாம போட்டாங்கோ கடலை<br />செல்லுக்கு எப்போதும் ‘டாப்-அப்’பு<br />மெசேஜூம் அப்பப்ப ‘பாப்-அப்’பு<br />மிஸ்டு காலெல்லாம் கிஸ்டு காலாச்சு<br />கிஸ்டு அக்கேஸனெல்லாம் -<br />நெவர் மிஸ்டு அக்கேஸனாச்சு<br />‘ப்யூர் லவ்’வுன்னு சொன்னாங்கோ கேக்கசொல்ல<br />தெரு நாய்ங்க சிரிச்சிதுங்க மனசுக்குள்ள<br />இட்டுகினு போன ஷோவெல்லாம் மேட்டினி<br />வூட்டு மக்க கெடந்தாங்கோ பட்டினி<br />ஊரல்லாம் தெர்ஞ்சிது டீலிங்கு<br />வந்துச்சு சோடிக்குஃபீலிங்கு<br />அண்ணம்மார் தந்தாங்கோ வார்னிங்கு<br />…த்தா, வந்துச்சு ஒருதபா டர்னிங்கு<br />இட்டுகினு வந்தானுவோ பீட்டர<br />தின்சு தின்சா வுட்டான் மேட்டர<br />…ய்யால,<br />மனச கசக்கி போட்டா தூசியா<br />நம்பர மாத்திகினா ஈஸியா<br />அவுங்க சோடிபோட இவனாண்ட தாடி & பீடி<br />தோஸ்துங்க திட்னாங்கோன்னு<br />பட்டுன்னு யோசிச்சு, சட்டுன்னு கட்டுனான்<br />‘வாம்மா’ன்னு - மாமா பொண்ண!<br />மஜா முப்பது நாள் மட்டுமில்லன்னு <br />புர்ஞ்சிது அதுக்கில்ல எல்லைன்னு<br />இவுங்க வாழ்க்க போறவிதம் சுகரு!<br />நமக்கென்னாத்துக்கு நைனாஃபிகரு?வேல்முருகன் ரெங்கநாதன் Velmurugan Renganathanhttp://www.blogger.com/profile/15691554761543886358noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-984021618950847448.post-32126709280485078742008-07-14T04:33:00.000-07:002008-12-11T15:33:46.728-08:00நகரத்தின் கைகள்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHC-YhFP8RtIk_TfeiJVNubMkc9EaUXV3Pw0nHPIcmljdmwIHCOYDVnZlSG1o7qN2WdIoXLaCZsWSCGR55iaukN6Iab658-TIKrWZfwpHIwQFdevYnyTOk2hYEYzTIBI8XQIC-ogkkxS31/s1600-h/nagarathin.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5222832718134402578" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHC-YhFP8RtIk_TfeiJVNubMkc9EaUXV3Pw0nHPIcmljdmwIHCOYDVnZlSG1o7qN2WdIoXLaCZsWSCGR55iaukN6Iab658-TIKrWZfwpHIwQFdevYnyTOk2hYEYzTIBI8XQIC-ogkkxS31/s320/nagarathin.bmp" border="0" /></a><font size="2"> எளிய மனிதர்களையும், ஏர் ஹாரன்களையும் குப்பைக்கூளங்களுடன் தன் எல்லைக்கப்பால் புறம் தள்ளுகின்றன நகரத்தின் கைகள் </font>
<br /><font size="2">
<br />ஆம், அவர்களுக்கு இங்கென்ன வேலை? நகரத்தின் கழிவுகளகற்றி சொற்ப சில்லறைகள் எண்ணும் ஒரு சிலர் தவிர்த்து!
<br />
<br />கனவுத் தொழிற்சாலையில் தன் மூங்கில் கருவி ஜெயிக்க விரும்பியவன், சிக்குகிறான் நகரத்தின் ஒரு மாலைநேர விளக்குப் பொறியில்
<br />
<br />முலைகள் தளர்த்திக் காட்டி வியாபாரம் பெருக்கும் 'வினைல்' விளம்பர அழகிகளின் சிரிப்பில் விழுந்தெழுகிறான், பத்திரமாக தன் கருவி காத்து
<br />
<br />தகதகக்கும் தன் பகல் கோபத்தில் புகைக்கரி பூசி, வியர்வைப் பசி தீர்த்து கெக்களித்து ஆங்கார ஆட்டம் ஆடுகிறது நகரம்
<br />
<br />அங்குச அச்சமேதுமிலா இயந்திர யானைகள் கான்கிரீட் குழம்பிறைத்து கட்டிடக் காடுகள் வளர்த்து நடைபாதைகள் மறுக்கின்றன
<br />
<br />வஞ்சம் பதுக்கி செயற்கைப் புன்னகை உதிர்த்து 'எக்ஸ்கியூஸ் மீ', 'ஸாரி' சொல்லி வாசனையுடன் விலகுகிறார்கள் வலிய மனிதர்கள்
<br />
<br />நகரத்தின் அடங்கா இரைச்சலில் தன் கருவி தோற்றது குறித்து இன்று மீண்டும் அழுகிறான் நம் மூங்கில் கலைஞன், தன் இருகாதுகள் பொத்தி
<br />
<br />ஜெயித்தவர்கள், ஜெயித்ததாக பீடிகை செய்பவர்கள் தவிர்த்து மற்ற அனைவருக்குமே இங்கு நிரந்தர இடமில்லைதான்
<br />
<br />நகரத்தின் ‘சுத்த’த்தில் அழுக்கேறி பொலிவிழக்கும் தன் கருவி கண்டு, பின்னொரு மாலை நேரத்தில் மஞ்சள் நிற டிக்கெட் வாங்குகிறான் சிகப்பு பேருந்தில்
<br />
<br />எல்லை தாண்டிய பேருந்தில், இளங்காற்றின் இதத்தில், ஜன்னல் கம்பிகளில் முகம் சாய்த்து உறங்குகிறான், எச்சில் ஒழுக
<br />
<br />பழுத்த சூரியன் புதையும் தருவாயில், பிளாஸ்டிக் பைகள் பொறுக்கிய அசதி மறந்து தும்பி பிடித்து விளையாடுகிறார்கள் சில சிறுவர்கள்
<br />
<br />ஊர் திரும்பியது குறித்து எல்லோருமே கேட்பார்கள்; தன் கருவி துடைத்து பின் அழுகையுடனே இவன் சொல்வான்: 'டவுனில் மூத்திரம் பெய்யக்கூட இடமில்லை…' என்று!</font>
<br /></font>வேல்முருகன் ரெங்கநாதன் Velmurugan Renganathanhttp://www.blogger.com/profile/15691554761543886358noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-984021618950847448.post-3716587270066570802008-07-13T21:41:00.000-07:002009-07-16T01:21:56.115-07:00கறுப்பு - வெள்ளை வண்ணங்கள்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb_-TNN9srutFJliD8si-lwqxZEGA31KsLG8dv-Gp61IOyTKeozA7IBVRIYYAs0j4ZhTlZraMpg24bHl7upe1ckOrhrUFMGqS1k7C-EZdj-qG7uOJAdgW4MxYfyty6FE9vSXt1X4px1ahN/s1600-h/ultimate.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5222807557024635922" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb_-TNN9srutFJliD8si-lwqxZEGA31KsLG8dv-Gp61IOyTKeozA7IBVRIYYAs0j4ZhTlZraMpg24bHl7upe1ckOrhrUFMGqS1k7C-EZdj-qG7uOJAdgW4MxYfyty6FE9vSXt1X4px1ahN/s320/ultimate.bmp" border="0" /></a><span style="font-size:100%;"> உனக்கும் எனக்குமானது எப்பொழுதும் சதுரங்க விளையாட்டாகவே இருந்திருக்கிறது<br />போருக்கான ஆரம்ப முனைப்பிலிருந்தன நமதிரு படைகளும்<br />‘இம்முறை எனக்கு விளையாட பிடிக்கவில்லை’ என்றேன் நான்<br />‘ஏன்?’ எனும் தொனியில் இருந்தன உனது முகஅசைவுகள்<br />‘இவ்விளையாட்டு வண்ணமயமானதாக எனக்கு தோன்றவில்லை’ என்றேன்<br />புன்முறுவலுடன் காலாட்படைக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்தாய் நீ<br />மடிவதற்கென்றே போர்க்களம் புகுபவை விசுவாசமுள்ள இக்காலாட்படைகள்<br />பருத்த உடல்கள் என்பதாலோ என்னவோ யானைகளுக்கு தடையில்லா நேர்க்கோட்டுப் பாதைகள்<br />குறுக்கும் நெடுக்குமாய் இரவு பகல் கடந்து களைக்கின்றன நமது பாலைவனக்கப்பல்கள்<br />குளம்பொலியில்லா குதிரைகளின் வினோத தாக்குதல்கள் துரோகத்தின் வலியை கற்பிக்கின்றன<br />ஒரு புள்ளியில் செறிந்து அழுத்துகின்றன இத்துரோகத்தின் வலிகள்<br />மகுடமிட்ட நமது பெயரளவு ராஜாக்கள் எப்பொழுதும் பீதியுடனே<br />ராணிகளுக்கு சக்தி தந்து வேடிக்கை பார்ப்பதென்பது இவர்கள் வாடிக்கை<br />நீ உன் குதிரைகளுக்குண்டான முழுத்திறனையும் பிரயோகித்தாய்<br />உன் அலட்சிய சிரிப்பை மென்றுதின்றபடி முன்னேறின கடிவாளமற்ற உனது குதிரைகள்<br />துரோகத்தின் வலிகளுக்கு கலங்காதவர்களுக்கே இங்கே வெற்றி வாய்ப்பு<br />இறுதியில் எனது ராஜாவின் தலைகொய்து நடனமாடியது உன் குதிரைகளுள் ஒன்று<br />தனது ராணியின் அரவணைப்பிலிருந்தபடி சிரித்துக் கொண்டிருந்தார் உன் ராஜா<br />‘இந்த ஆட்டம் வண்ணமயமானதாக இல்லை’ என்றேன் நான் மீண்டும்<br />‘கறுப்பும், வெள்ளையும் வண்ணங்கள் இல்லையா என்ன?’ என்றாய் நீ<br />ஆம், கறுப்பும் வெள்ளையும் ஒரு வகையில் வண்ணங்கள்தாம்!<br />அவை சதுரங்கச் சமவெளியில் குருதி கொப்பளிக்கா மரணங்களுக்கு வித்திடும் வண்ணங்கள்…</span>வேல்முருகன் ரெங்கநாதன் Velmurugan Renganathanhttp://www.blogger.com/profile/15691554761543886358noreply@blogger.com0