Tuesday, July 15, 2008

மரங்களின் கண்கள்


ஒவ்வொரு இலை உதிரும்போதும்
திறந்து மூடுகின்றன‌ மரங்களின் கண்கள்
ஆயிரமாயிரம் திறந்து மூடல்கள் -
ஒவ்வோர் இலையுதிர்காலத்திற்கும்
எனினும், இலையுதிர்காலங்கள் தொடர்வதில்லை
வசந்தம் நோக்கிய‌
காத்திருப்புகளில் மகிழ்கின்றன மரங்கள்
மரங்களுக்கான சில நியதிகள்
மானுடத்திற்கும் பொருந்தவே செய்கின்றன!